ஆகஸ்ட் 1-ம் தேதியே ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நேர்கொண்ட பார்வை’. போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில்,ஆகஸ்ட் 10-ம் தேதி சனிக்கிழமையாக இருப்பதால் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியானால் படத்தின் வசூல் நன்றாக இருக்கும் என்று யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவு என்ன என்பது, இறுதிக்கட்டப் பணிகள் முடிவு பெறுவதைப் பொறுத்து அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் தான் ‘நேர்கொண்ட பார்வை’. வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார்.