’’நேபாளத்துக்குக் கிளம்பு..’’  மனீஷாவை வறுத்தெடுத்த ‘நெட்டிசன்’கள்..

இந்தியில் பிரபல நடிகையாக விளங்குபவர், மனீஷா கொய்ராலா.

தமிழில் ‘பாபா’’’ முதல்வன்’’ ‘ இந்தியன்’’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவரது பூர்வீகம் ,நேபாளம்.

இந்தியாவில் பிழைக்க வந்தாலும் மனீஷாவுக்கு தாய் நாட்டின் மீது பற்று அதிகம்.

இந்தியாவின் எல்லையில் உள்ள மூன்று கிராமங்களுக்கு நேபாள நாடு சொந்தம் கொண்டாடி, நம்மை வம்பு சண்டைக்கு இழுத்துள்ள நிலையில், மனீஷா கொய்ராலா, வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு, அவரது  சொரூபத்தை வெளிப்படுத்தியுள்ளது.

நேபாள நாட்டின் எதிர்காலம் குறித்து அந்த டிவிட்டர் பதிவில் அவர் கவலை தெரிவித்திருந்தார். நேபாளம் மீது பச்சாதாபம் காட்டி இருந்தார்.

இதனால் சமூக வலைத்தளங்கள் மனீஷாவை வறுத்து எடுத்து வருகின்றன.

‘’ நேபாளம் சீக்கிரமே சீனாவின் காலனி ஆதிக்க நாடாகப் போகிறது’’ என டிவிட்டரில் ஒருவர் மென்மையாகக் கருத்து  தெரிவித்திருந்தார்.

ஆனால் பல நெட்டிசன்கள்’’ மூட்டை முடிச்சுகளைக் கட்டி, நேபாளத்துக்குக் கிளம்பு’’ என மனீஷாவுக்கு எதிராக வெடித்துள்ளனர்.

.. பிழைப்பு கொடுத்த இந்தியாவுக்கு நீங்கள் காட்டும் நன்றி இதுதானா?’’ என வேறு சிலர் சீறி உள்ளனர்.

தனி நபர் இடைவெளியை மேலும் இறுக்கிக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறார், பாபாவில் நடித்த இந்த பாப்பா