ஜல்லிக்கட்டு போராட்டத்தில், காது வலிக்கும் அளவிற்கு காட்டு கத்து கத்தி, பல ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சியின் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. ஒரு வீர மங்கையாக அனைவரின் பார்வையிலும் ஜொலிக்கத்தார்.

ஆனால் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கேமரா இருப்பதை மறந்து, சில விஷயங்களை செய்ததால் சர்ச்சையில் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் .

வாங்கின மொத்த பெரும் நீரில் கரைத்து போல் ஆகிவிட்டது .காயத்ரியுடன் சேர்ந்து கொண்டு ஜூலி செய்த சில காரியங்கள் அனைவரையும் கடுப்பாக்கியது. அதனால் பிக்பாஸ் வீட்டில் மட்டுமல்லாது, தமிழக ரசிகர்களிடம் ஜூலிக்கு கெட்ட பெயர் மட்டுமே மிஞ்சியது. …

இந்நிலையில் காணும் பொங்கலான இன்று ஜூலி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்று நெட்டிசன்களை கடுப்பாக்கியுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கோஷம் போடுவது போன்ர அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் உங்களை வீர தமிழ்ச்சி என நம்பி ஏமாந்த நாள் இன்று என சகட்டு மேனிக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.