டில்லி,

புதிய 50 ரூபாய் நோட்டுகளை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் இந்த புதிய நோட்டு வெளியிடப்படும் என மத்திய அரசு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி வருகிறது.

மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8ந்தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. அதையடுத்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டு,  புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் தற்போது புதிய 50 ரூபாய் நோட்டுக்கள் வெளியிட இருப்பதாக, சமூக வலைதளங் களில் செய்திகள் வைரலாக பரவி வருகிறது.

நீல நிறம்கொண்ட புதிய 50 ரூபாய் நோட்டுகளின் புகைப்படங்கள்  வைரலாகிவருகிறது. இந்தப் புதிய 50 ரூபாய் நோட்டுகள் புத்தாண்டு முதல் புழக்கத்துக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

மகாத்மா காந்தியின் புகைப்படத்துடன் வெளிவரும் இந்த ரூபாய் நோட்டின் பின்புறம், தென்னிந்தியாவைச் சேர்ந்த கோயில் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.