சென்னை:

அதிமுக.வில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், ராஜ கண்ணப்பன் , சி.வி.சண்முகம், மைத்ரேயன், மனோஜ் பாண்டியன், கோகுலஇந்திரா, சண்முகநாதன் , ஆதிராஜாராம், பிரபாகர், சோமசுந்தரம், சேவூர் ராமச்சந்திரன், முக்கூர் சுப்பிரமணியன், புத்திசந்திரன், முருகுமாறன் ஆகிய 19 பேர் அமைப்பு செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொள்கை பரப்பு துணை செயலாளராக வைகை செல்வன், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக சிவபதி, இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளராக பரஞ்சோதி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராக ராமசந்திரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மீனவர் பிரிவு இணை செயலாளராக ஜெயபால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் துரைக்கண்ணு, தேனி மாவட்ட செயலாளராக சையது கான், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக குமார், தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக சத்யா, வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக ரவி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் நியமிக்கப்படும் வரை பணிகளை கவனிக்க எஸ்டிகே ஜக்கையன் யு.ஆர். கிருஷ்ணன், ராசு, சங்கரதாஸ் ஆகிய 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.