டில்லி:

வாகனங்களுக்கான காப்பீடு (இன்சூரன்ஸ்) கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த புதிய கட்டண உயர்வு வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது குறித்து, இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

2018-19-ம் ஆண்டுக்கு இருசக்கர வாகனம் மற்றும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் உயர்ந்தப்பட்டுள்ளது இந்திய புதிய கட்டண உயர்வு வரும் 1-ந் தேதி (ஏப்ரல்) முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி இரு சக்கர வாகனங்கள்  151 சி.சி. முதல் 350 சி.சி. இழுவைத்திறன் கொண்ட  வாகனங்களுக்கு ரூ.985 காப்பீட்டு தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 11 சதவீத உயர்வு என கூறப்படுகிறது.

ஆதுபோல, 350 சி.சி. இழுவைத்திறனுக்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு காப்பீட்டு தொகை 128 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ஏற்கனவே ரூ.1304 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது  ரூ.2,323 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறிய சரக்கு லாரிகளுக்கு ரூ.24 ஆயிரத்து 190 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.4 ஆயிரத்து 523 அதிகம். அதாவது 23 சதவீத உயர்வு.

12 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை எடையுள்ள (6 சக்கர லாரி) வாகனங்களுக்கு ரூ.32 ஆயிரம் 367 நிர்ணயம். இது கடந்த ஆண்டை விட ரூ.3,468 அதிகம்.

20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை எடையுள்ள (10, 12, 14 சக்கரம்) வாகனங்களுக்கு ரூ.39 ஆயிரத்து 849 ஆகும்.

கடந்த ஆண்டை விட ரூ.8 ஆயிரத்து 223 அதிகம் ஆகும். இது 26 சதவீத உயர்வு ஆகும்.

40 ஆயிரத்திற்கு மேல் எடையுள்ள வாகனங்களுக்கு ரூ.38 ஆயிரத்து 308 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.5,284 அதிகம். அதாவது 16 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுபோல பயணிகள் சவாரி ஆட்டோ, 17 பயணிகள் செல்லக்கூடிய வாகனம் ஆகியவற்றுக்கும் 17 சதவீதம் வரை இன்சூரன்ஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இன்சூரன்ஸ் கட்டணம் அதிரடியாகவும், அதிகமாகவும் உயர்த்தப்பட்டிருப்பது வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.