சென்னை: மத்தியஅரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கை2020 தொடர்பாக  உயர்கல்வித்துறை இன்றுமுதல் ஆன்லைன் மூலம், கல்வியாளர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளின்  கருத்துக்களை கேட்கிறது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த கல்விக்கொள்கையில், மும்மொழிக்கொள்கையை மத்தியஅரசு அறிவித்து உள்ளத. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளர்ந்துள்து. ஆனால்,  இந்தியாவில் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளதாக மத்தியஅரசு கூறி வருகிறது.  பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை தாய் மொழியில் கல்வி கற்கவும், மும்மொழி கொள்கையை அமல்படுத்தவும், உயர் கல்வியில் பெரிய அளவில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் இந்த புதிய கல்வி கொள்கையில் வகை செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய கல்விக்கொள்கைக்கு இதற்கு மத்திய மந்திரிசபை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை இன்றுமுதல் ஆன்லைன் வழியில் கருத்துக்களை கேட்கிறது. இதில் பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்லூரி நிர்வாகத்தினர் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.