புதுடில்லி: மூத்த இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் 2ம் தேதியன்று ஓய்வு பெறுவதற்கான சாத்தியக்கூறு குறித்து பேசினார்.  அவர் தனது டென்னிஸ் வாழ்க்கையை வாழ்ந்து விட்டதாகவும், இந்நேரம் புதிய தலைமுறை வீரர்களால் தன் இடம் நிரப்பப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இஸ்லாமாபாத்தில் நடந்த டேவிஸ் உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் வேறு எந்த முன்னணி டென்னிஸ் வீரரும் இஸ்லாமாபாத் செல்ல முன்வராத நிலையில் பயஸின் பெயர் அணியில் சேர்க்கப்பட்டது.

46 வயதான இந்த இந்திய வீரர் தனது 44 வது டேவிஸ் கோப்பை இரட்டையர் வெற்றியை அடைவதன் மூலம் தனது சொந்த சாதனையை சிறப்பாக முன்னேற்றினார், இந்த முறை அறிமுக வீரர் ஜீவன் நெடுஞ்செழியனுடன் இணைந்து ஆடினார். பாகிஸ்தானை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தியது, இந்திய அணி.

“எனது அனுபவம் என்னை நடத்திச் செல்கிறது.  ஆனால், அணிக்கு சிறந்தது என்னவென்றால், இன்னும் ஒரு வருடத்திற்கு மேல் நான் விளையாட்டில் நீடிக்கக் கூடாது“, என பயஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.

“டேவிஸ் கோப்பையில் கடந்த 30 ஆண்டுகளாக நான் சிறப்பாக விளையாடியிருக்கிறேன். நான் என் டென்னிஸ் வாழ்க்கையை நாட்டிற்காக விளையாடியே கழித்துள்ளேன். “இருப்பினும் தேவைப்பட்டால், எனது நாட்டை பிரதிநிதிக்க எப்போதும் நான் இருப்பேன் என்று பயஸ் தெரிவித்தார்.

“என்னை மிகவும் ஊக்குவிக்கும் பிற விஷயங்கள் உள்ளன. ஒலிம்பிக் பதக்கங்களை வெல்வதற்கும், விம்பிள்டன் சாம்பியன்ஷிப்பை வெல்வதற்கும் இளைஞர்களைப் பயிற்றுவிப்பதும் பயிற்சியளிப்பதும் வளர்ப்பதும் என்னுடைய கனவு. ”