சென்னை:

சிரியர்களின்  போராட்டத்தை தொடர்ந்து, தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதால் புதுபிரச்சினை உருவாகும் என்று தமிழக அரசை எச்சரித்த உயர்நீதி மன்ற மதுரை கிளை, போராடுபவர்களை அழைத்து அரசு பேச வேண்டும் என்று கூறி உள்ளது.

ஆசிரியர் சங்கங்கள் சார்பில்,  புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, 2004ம் ஆண்டு  ரத்து செய்யப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும் என்றும்,  இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த  22-ஆம் தேதி முதல் போராடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 7-ஆவது நாளாக போராட்டம்  நடைபெற்று வருகிறது.

அரசு எச்சரித்தும், ஆசிரியர்கள் ிக்கு திரும்பாததால் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது,   ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அரசு மீது புகார்களை அடுக்கினர்.  . போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது பொய் வழக்குகளை தமிழக அரசு போட்டு கைது செய்கிறது என்று குற்றம் சாட்டினர்.

அதைத்தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதிகள்,   ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளிடம் அரசு ஏன் பேச்சு வார்த்தை நடத்தக் கூடாது? என கேள்வி எழுப்பினர்.

தமிழக அரசு ற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதன் மூலம் புது பிரச்சினையை அரசு உருவாக்குகிறது. அவர்களும் பணி நிரந்தரம் கோரி போராடுவர், வழக்கு தொடருவர் என்று நீதிபதிகள் கூறினர்.

இந்த வழக்கில்  அரசுக்கு இடைக்கால உத்தரவை போட முடியாது என்ற நீதிமன்றம், அரசின் நிதி நிலைமை தொடர்பான விஷயங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்து விட்டனர்.

சட்டப்படியான தீர்வுகளை நாடாமல் போராட்டத்திற்கு சென்று விட்டதால் உத்தரவு பிறப்பிக்க முடியாது. தமிழக அரசும், சங்கங்களும் பேசி முடிவெடுக்க வேண்டும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் சாலையில் இறங்கி போராடுவது ஆசிரியர்களுக்கு அழகல்ல.  மாணவர்கள் நலனில் ஆசிரியர்களுக்கு அக்கறையில்லையா? என நீதிபதி கிருபாகரன் அதிருப்தி தெரிவித்தார்.

தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு திரும்ப முடியுமா?  என நாளை மதியம் பதிலளிக்க ஜாக்டோ ஜியோவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.