டெல்லி: மத்திய அரசு சமூக வலைதளங்களுக்கள் மற்றும் டிஜிட்டல் மீடியாக்களுக்கான  புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி,  சமூக வலைதளங் களில்  ஆபாசத்தகவல்கள் மற்றும் வன்முறை உள்பட தேசவிரோத பதிவுகள் குறித்து,  புகார் அளிக்கப்பட்ட 36 மணி நேரத்திற்குள், அவை முழுமையாக   நீக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.

சமூக வலைதளங்களுக்கான புதிய தொழில்நுட்ப விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் புதிய அறிவிப்புகளை  இன்று (பிப்ரவரி 25) வெளியிட்டனர்.

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக ஊடக தளங்கள், அரசாங்கம் அல்லது சட்ட உத்தரவுக்குப் பிறகு, அதில் பதிவு செய்யப்பட்டிருந்த  உள்ளடக்கத்தை சீக்கிரம் அகற்ற வேண்டும், அதிகபட்சமாக 36 மணி நேரத்திற்குள் அகற்றப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

அதுபோல, பாலியல், ஆபாசங்கள், அது தொடர்பான புகைப்படங்கள் குறித்து,  புகாரைப் பெற்ற 24 மணி நேரத்திற்குள், அந்தபதிவுகளை முழுமையாக அகற்ற வேண்டும்.

இது தொடர்பாக சமூக வலைதள நிறுவனங்களுடன் நடத்திய ஆலோசனையின்போதுரு, நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள், 72 மணி நேரம் அவகாசம் கோரியயதாகவும், ஆனால்,  மத்தியஅரசு 36 மணி நேரம் வரை மட்டுமே அவகாசம் வழங்கி உளளதாகவும் கூறப்படுகிறது.

இந்த சமூக வலைதளங்களுக்கான புதிய தொழில்நுட்ப  விதிகளுடன் சமூக வலைதள நிறுவனங்களை ஒழுங்குபடுத்த விரும்பும் பிற நாடுகளுடன் இந்தியா இணைகிறது.

சமீபத்தில் புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளின் எதிர்ப்புக்கள் குறித்த டிவிட்கள், டிவிட்டரில் டிரெண்டிங்கான நிலையில், அதை அகற்ற மத்தியஅரசு உத்தரவிட்டும்,  அதை கண்டுகொள்ளாத நிலை ஏற்பட்டது.  இதைத்தொடர்ந்து, சமூக இணையதளங்களைக் கட்டுப்படுத்த மத்தியஅரசு புதிய தொழில்நுட்ப விதிகளை உருவாக்கி உள்ளது.

மேலும், இதுதொடர்பாக, சமூக வலைதளங்கள்,  தங்கள் தளத்தில் முக்கியமான அறிவிப்வு  வெளியிட வேண்டும் அல்லது விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை மற்றும் அணுகல் அல்லது பயன்பாட்டிற்கான பயனர் ஒப்பந்தம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

மேலும், தவறான மற்றும் அவதூறான எந்தவொரு தகவலையும் ஹோஸ்ட் செய்யவோ, காண்பிக்கவோ, பதிவேற்றவோ, திருத்தவோ, வெளியிடவோ, கடத்தவோ, புதுப்பிக்கவோ அல்லது பகிரவோ கூடாது என்று புதிய விதிமுறையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

அதுபோல,  சிறார்களுக்கு தீங்கு விளைவிக்கும் பதிவுகள், புகைப்படங்கள்,, காப்புரிமையை மீறும் அல்லது சட்டத்தை மீறும் எந்தவொரு தகவலையும் வெளியிட வேண்டாம் என்றும், சம்பந்தப்பட்ட சமுக வலைதளங்கள்   பயனர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, பாதுகாப்பு அல்லது இறையாண்மையை அச்சுறுத்தும் எந்தவொரு பதிவையும் வெளியிடக்கூடாது என்பது குறித்து சமூக வலைதளங்களுக்கு பயனர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள், தனியுரிமைக் கொள்கை அல்லது அத்தகைய இடைத்தரகரின் கணினி வளத்தை அணுக அல்லது பயன்படுத்துவதற்கான பயனர் ஒப்பந்தம் ஆகியவற்றைப் பின்பற்றாவிட்டால், இடைத்தரகர் ஒவ்வொரு ஆண்டும் பயனர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

கணினி வளத்திற்கான பயனர்களின் அணுகல் அல்லது பயன்பாட்டு உரிமைகளை உடனடியாக நிறுத்தவோ அல்லது இணங்காத நிலையில் அதை அகற்றவோ அதற்கு உரிமை உண்டு.

மேலும், இந்த விதிகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 3 மாதங்களுக்குள் புதிய விதிகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க சி.சி.ஓ நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதுடன்,  சட்டம் மற்றும் விதிகளுக்கு இணங்குவதை உறுதி செய்வது சிசிஓ ( CCO) பொறுப்பாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, ஒவ்வொரு சமூக வலைதள நிறுவனங்களும் மாதம் ஒருமுறை எவ்வளவு புகார்கள் வருகிறது என்பது சம்பந்தமான விரிவான தகவல்களை வழங்க வேண்டும்.

புகார்களை கையாள்வதற்காக ஒவ்வொரு சமூக வலைதள நிறுவனங்களும் தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

ஒரு தவறான தகவல்களை பரப்பக்கூடிய முதல் நபர் யார் என்ற விஷயங்களை சமூக வலைதளங்கள் கட்டாயம் கண்டறிய வேண்டும்.

அந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை கிடைக்கும் வழக்குகளாக எடுத்துக்கொள்ளப்படும். அரசோ அல்லது நீதிமன்றமோ அதுகுறித்த தகவல்களை கேட்டால் நிச்சயம் வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது

இந்தியாவில் வாட்ஸ்-அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 53 கோடி பேர் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன. அதுபோல, வீடியோ வலைதளமான யுயூடியூபை   44.8 கோடி பேர் பயன்படுத்துவதாகவும்,   ஃபேஸ்புக்கை  41 கோடி பேரும்,  இன்ஸ்டாகிராம்  வலைதளத்தை 21 கோடி பேரும், டிவிட்டர் இணையதளத்தை  1.75 கோடி பேரும் உபயோகப்படுத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது.