டந்த சில நாட்களாக  நீடித்து வந்த வழக்கறிஞர் பிரச்சனையை நீதிமன்றம் ஒரு முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.
புதிதாக கொண்டுவரப்பட்ட வழக்கறிஞர் சட்ட திருத்தம் தங்களது தொழில் சுதந்திரத்தை பாதிப்பதாக வழக்கறிஞர்கள் சங்கங்கள் போரட்டத்தில் ஈடுபட்டு வந்தன. இதனால் வழக்கறிஞர் சங்கங்களுக்கு பார்கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில், “புதிய சட்டதிருத்த மசோதாவை அடிப்படையாக வைத்து வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் எண்ணமில்லை. வழக்கறிஞர்கள் சங்கங்கள்  போராட்டத்தை விட்டு பேச்சு வார்த்தைக்கு வரவேண்டும்” என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.
ஆனாலும் சென்னையை தவிர மற்ற ஊர்களில் வழக்கறிஞர் சங்கங்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தன.
download (2)
இதையடுத்து இன்று உயர்நீதிமன்ற பதிவாளர் ரவீந்திரன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில் “வழக்கறிஞர் சட்ட திருத்தம் தொடர்பாகவும்,  நீதிமன்ற விதிக்குழுவை மாற்றி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.  அதில் மூன்று நீதிபதிகள் இருந்த விதிக்குழு மாற்றி அமைக்கப்பட்டு நாகமுத்து, எம்.எம் சுந்தரேஷ், மணிகுமார், பி.என்.பிரகாஷ், ராஜூவ் சக்தேர் ஆகியோர் புதிய விதிக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அந்த குழுவிடம் வழக்கறிஞர் சட்ட திருத்தம் தொடர்பாக,  தங்களுடைய கருத்துகளை வழக்கறிஞர்கள் தெரிவிக்கலாம்.  புதிய சட்ட திருத்தம் குறித்து விதிக்குழு  முடிவெடுக்கும் வரை  வழக்கறிஞர்கள் மீது  எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது.
அதே நேரம்,  தொடர்ந்து நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடும்  வழக்கறிஞர்கள் மீது பழைய விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்”  குறிப்பிட்பிடப்பட்டுள்ளது.
இதை ஏற்றுக்கொண்டு வழக்கறிஞர் சங்கங்கள், தங்களது போராட்டத்தை கைவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.