சென்னை:

ங்களது பகுதிகளில் டாஸ்மாக் வேண்டாம் என கிராமப் பஞ்சாயத்துக்கள் தீர்மானம் நிறைவேற்றினால், அதை செயல்படுத்துவது தொடர்பாக தமிழகஅரசு ஏன் புதிய சட்டம் கொண்டு வரக்கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதுகுறித்து விளக்கம் அளிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.

டாஸ்மாக் மதுபானக்கடையை இடம் மாற்றம் செய்ய உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, மாநில அரசு ஒரு மக்கள் நல அரசாக இருக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், இது அரசியல் அமைப்பு சட்டம் சார்ந்த பிரச்சனை, சமூக நலன், பொதுமக்களின் உடல்நலம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வது கிராம பஞ்சாயத்துகளின் கடமை என்று கூறிய  நீதிபதிகள், மாநில அரசு ஏன் கிராம பஞ்சாயத்துகளை மதிக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினர்.

மேலும்,  அரசின் கொள்கை முடிவுகள் காலதாமதம் செய்யப்படக்கூடாது என்று  கருத்து தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக மாநில அரசு  ஒரு ஆலோசனை கூட்டத்தைநடத்த வேண்டும் என்றும், இது தமிழகத்திற்கு மட்டுமன்றி நாட்டின் ஒட்டுமொத்தப் பிரச்சினை என்று தெரிவித்தனர்.‘

தொடர்ந்து பேசிய நீதிபதிகள், டாஸ்மாக் கடை வேண்டாம் என கிராம பஞ்சாயத்துகள் தீர்மானம் நிறைவேற்றி னால் அதை செயல்படுத்தவும், பொது இடங்களில் மது குடிப்பதை தடுப்பது தொடர்பாகவும் புதிய சட்டங்கள் கொண்டுவருவது குறித்து தமிழக அரசு 4 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.