சென்னை:

கிரிக்கெட் வீரர்களின் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில்  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பல்வெறு நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக குழு அமைத்து விழிப்புணர்வை கிரிக்கெட் வீரர்களிடையே ஏற்படுத்தி வருகிறது.

சமீப காலமாக கிரிக்கெட் வீரர்கள் ஊக்க மருந்துகளை உட்கொள்வது, சூதாட்டம், வயதை மாற்றி தெரிவித்து மோசடி மற்றும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவது போன்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன.

இதுதொடர்பாக ஆய்வு செய்து வந்த பிசிசிஐ, அனைத்து கிரிக்கெட் சங்கங்களும், அதன் உறுப்பினர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கு  போதைப்பொருள் குறித்த புகார்களை அணுகவும் வீரர்கள் புகார்கள் தெரிவிக்கவும் தனிக் குழு ஒன்றை அமைத்துள்ளது.

மேலும், இது தொடர்பாக  ஹெல்ப் லைன் எண்களும் அளிக்கப்பட்டுள்ளன. இந்த எண்கள் இந்தியா முழுவதும் உள்ள பிசிசிஐ அலுவலகங்கள், கிரிக்கெட் மைதானங்கள் போன்றவற்றில் காட்சிக்கு வைக்கப்படும் என்றும் பிசிசிஐ தெரிவித்து உள்ளது.