சென்னை,

வம்பர்.7-ம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீப காலமாக மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் நடிகர் கமலஹாசன் அரசியல் கட்சி ஆரம்பிக்க இருப்பதாக கூறியிருந்தார். அது தொடர்பான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள் பேட்டியில், வரும் 7ந்தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக கூறி உள்ளார்.

அதில், நவம்பர் 7-ம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளேன். நம் இயக்கத்தார் என்னுடனும், மக்களுடனும் தொடர்பு கொள்ள வசதியாக ஏற்பாடுகள் நடக்கின்றன.

தமிழகத்துக்கு கடமையாற்ற நினைப்பவர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன். தியாகமாக நினைத்து முன்வருபவர்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள்; அவர்கள் என்னை கடன்பட செய்வார்கள்.

இளைஞர்களை ஒருங்கிணைக்க வேண்டிய கடமையும் தேவையும் எனக்கு வந்து விட்டது. நமது இயக்கத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோருடன் சேர்ந்து தமிழகத்துக்கு பலம் சேர்ப்போம் என்று குறிப்பிட்டு உள்ளார்.

கமலின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அன்று தனது அரசியல் பிரவேசம் குறித்து கமல் அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.