கொரோனா தொற்று பரவல் தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் கட்டுப்பாடால் தள்ளிவைக்கப் பட்டது. இதற்கான தேர்தலில் டி.சிவா தலைமையிலான அணியும், முரளி ராமநாராணன் தலைமையிலான அணியும் போட்டியிடுவதாக இருந்தது.
இதற்கிடையில் தமிழ் திரைப்பட தயாரிப் பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிட புதிய அணி உருவாகிறது. நமக்கு நாமே குழுவின் சார்பாக அரசு விதிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளி கடைபிடிக் கப்பட்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கள் சங்கத் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் தயாரிப்பாளர் எஸ் விஜயசேகரன் அலுவலகத்தில் நடைபெற்றது.


கடந்த 10 ஆண்டுகளாக பதவி வகித்த நிர்வாகிகள் சரியாக செயல்படாத காரணத் தினால் அனைத்து தயாரிப்பாளர்களும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின் றனர். மேலும் தயாரிப்பாளர்கள் சந்தித்து வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் விதமாக இனி வரும் தேர்த லில் இதுவரை பதவி வகித்தவர்கள் மீண்டும் பதவிக்கு வராமல் தடுக்க புதிய வர்கள் தலைமேயேற்று நல்ல நிர்வாகம் அமைய கலந்துரையாடப்பட்டது.
இந்த சிறப்பு கூட்டத்தில் விஜயசேகரன், எஸ்டி சுரேஷ்குமார், ராமச்சந்திரன் தயாளன், தங்கம் சேகர், திருப்பூர் செல்வ ராஜ், திருநெல்வேலி ஜெயக்குமார், அமல் ராஜ், தன சண்முக மணி, வெங்கடேஷ் துருவா மற்றும் பல தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டுள் ளனர். கூடிய விரைவில் அனைத்து தயாரிப்பாளர்களையும் ஒருங்கிணைத்து ஆலோசித்த பிறகு முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என்று புதிய அணியினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குனர் பாரதிராஜா தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நடப்பு சங்கம் என்ற புதிய அமைப்பு தொடங்கி அதன் தலைவர் பொறுப்பு ஏற்றிருக்கிறார். இச்சங்கத்தில் 100 பேர் உறுப்பினர்கள் ஆகிவிட்டனர். தயாரிப்பாளர் டி.சிவா இச்சங்கத்தில் செயலாளராக பொறுப்பு ஏற்றிருக்கிறார்.