சென்னை:

மிழக அரசுப் பள்ளி  அரசு உதவி பெறும் பள்ளி  மாணவ, மாணவியருக்கு வரும் கல்வி ஆண்டு முதல் புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சீருடை 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழகஅரசு  பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள  அரசாணையில்,  ‘வரும், 2019-20 ம் கல்வியாண்டிற்கு, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் புதிய சீருடைகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஒரு சீருடையும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை இன்னொரு சீருடையும் அறிமுகம் ஆகிறது,” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு கரும்பச்சை நிற கால்சட்டையும், இளம் பச்சை நிற கட்டமிடப்பட்ட மேல் சட்டையும் அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவித்து உள்ளது.

அதே போன்று 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு சந்தன நிற கால் சட்டையும் சந்தன நிற கட்டமிடப்பட்ட மேல் சட்டையும், மாணவியருக்கு கூடுதலக சந்தன நிற மேல் கோட்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

சத்துணவு சாப்பிடும் 40 லட்சத்து 66 ஆயிரத்து 217 மாணவ, மாணவியருக்கு இந்த ஆண்டு இலவச சீருடைகள் வழங்கப்பட உள்ளன.

9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கு ஏற்கனவே சீருடைகள் மாற்றப்பட்டுள்ளன.

தமிழக பள்ளிக்கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.