சென்னை,

மிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் ஒரு வாரம் விடுமுறை விடப்படுவதாக கோர்ட்டு பதிவாளர் தெரிவித்து உள்ளார்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட் மதுரை கிளை உள்பட அனைத்து கோர்ட்டுகளுக்கும்  வரும் 23-ம் தேதியிலிருந்து, ஜனவரி 1-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐகோர்ட் பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

நாளை 23-ம் தேதி முதல் ஜனவரி முதல் தேதி வரை ஐகோர்ட் மற்றும் மதுரை கிளைக்கு விடுமுறை விடப்படுகிறது,

28-ம் தேதியில் விடுமுறைக்கால வழக்குகளை சென்னையில் 4 நீதிபதிகளும், மதுரையில் 2 நீதிபதிகளும் விசாரிப்பார்கள்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.