பெங்களூரு: புத்தாண்டை கொண்டாடும் விதமாக ஆதரவாளர்களுடன் சென்ற கன்னட சலுவாலி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

கர்நாடகாவில் மாநிலம் பெங்களூரு நகரில் புத்தாண்டை முன்னிட்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 12 மணி நேரம் 144 தடை உத்தரவை போலீசார் பிறப்பித்துள்ளனர். அதனால், நேற்றிரவு நகரின் மகாத்மா காந்தி சாலையில் விதிமுறைகளை மீறி சென்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந் நிலையில் போலீசாரின் தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புத்தாண்டை கொண்டாடும் விதமாகவும் மகாத்மா காந்தி சாலைக்கு தனது ஆதரவாளர்களுடன் கன்னட சலுவாலி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் சென்றார். அவரை போலீசார் கைது செய்தனர்.

அப்போது கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள் போலீசாருக்கு எதிராக முழக்கமிட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.