வெலிங்டன்: நியூசிலாந்தில் பைசர் மற்றும் பயோ என்டெக் தயாரிப்பில் உருவான கொரோனா தடுப்பூசிக்கு அந்நாடு ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புக்கு எதிராக பல்வேறு நாடுகளும் தடுப்பூசிகளை தயாரிக்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந் நிலையில் நியூசிலாந்தில் முதல் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பைசர் மற்றும் பயோ என்டெக் தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் மார்ச் மாதம் இறுதிக்குள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.