லண்டன்:

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. இது அவருக்கு பிறந்த 6வது குழந்தை என கூறப்படுகிறது.

போரிஸ் ஜான்சனுக்கும், அவரது காதலியுமான  (வருங்கால மனைவி)  கேரி சைமண்ட்ஸ் தம்பதிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், லண்டனில் உள்ள மருத்துவமனையில் தாயும், சேயும் நலமுடன் இருப்பதாகவும் அந்நாட்டின்  அரசு செய்தித் தொடர்பாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.

போரிஸ் ஜான்சன் அவரு முன்னாள் மனைவியான மெரினா வீலரிடம் இருந்து 2018ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு 4  குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது.

போரிஸ் ஜான்சன் மற்றும் மெரினா வீலர் ஆகியோரின் குழந்தைகள்,  லாரா லெட்டிஸ், 26, மிலோ ஆர்தர், 24, காசியா பீச், 22, மற்றும் தியோடர் அப்பல்லோ, 20.

கலை ஆலோசகர் ஹெலன் மெக்கின்டைருடன் அவருக்கு ஐந்தாவது குழந்தை ஸ்டீபனி மெக்கின்டைர் உள்ளார். ஒரு விவகாரத்தின் விளைவாக அவர் பெற்ற இரண்டு குழந்தைகளில் ஸ்டீபனி ஒருவர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனது தற்போதைய காதலியும், வருங்கால மனைவியுமான  கேரி சைமண்ட்ஸ் இன்று ஒரு அழகான ஆண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். இது கேரி சைமண்ட்ஸ்க்கு முதல்குழந்தை. ஆனால் போரிஸ் ஜான்சனுக்கு 6வது குழந்தை என கூறப்படுகிறது.

போரிஸ் ஏற்கனவே 2 முறை திருமணத் செய்து கொண்டுள்ளார். அந்த இரண்டுமே விவாகரத்தாகி விட்டது. தற்போது, மேரிசைமண்ட்ஸ் உடன் வாழ்ந்து வருகிறார்.

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சுமார் ஒரு மாத காலம் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்றார். தொடர்ந்து,   கடந்த திங்கள்கிழமை  பிரதமர் அலுவலகத்துக்குத் திரும்பியது குறிப்பிடத்தக்கது.