ஞ்ச்குலா

லாத்கார வழக்கில் தண்டனையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சாமியார் ராம் ரஹிம் பற்றிய அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் இதோ :

சாமியார் என சொல்லப்படும் இவர் சன்யாசி அல்ல, சம்சாரியே.  இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.  அது தவிர வளர்ப்பு மகள் என சொல்லப்படும் ஒருவரும் உள்ளார்.   இவர் வளர்ப்பு மகள் என சொல்லப்பட்டாலும் இந்தப் பெண் இவருக்கு மனைவி அல்லாத வேறொருவர் மூலம் பிறந்தவர் என்றே அரியானாவில் பலரும் கூறுகின்றனர்.

இவர் இதே போன்றே பல பெண் சிஷ்யைகளை மகள் எனக் கூறி தனது ஆசிரமத்தில் அனுமதித்துள்ளார்.   ஆனால் மகளாக வந்தவர் பலரும் இவருக்கு அதிகார பூர்வமற்ற மனைவிகளாகவே வாழ்ந்துள்ளனர்.   தன்னால் அவர்களின் வாழ்க்கை ஆசிர்வதிக்கப்பட்டுள்ளதாக அவர்களை நம்ப வைத்துப் பின் பாலுறவில் அவர்களாகவே இவருடன் ஈடுபட ஆசை கொள்ளும்படி செய்துள்ளார்.  அவரைச் சுற்றி எப்போதுமே இது போல சிஷ்யைகள் இருப்பது வழக்கம்.   அவர்களுக்கு பணத்தை அள்ளி வீசுவாராம்.

அவர் தனது படுக்கையறையை குஃபா என்றே கூறுவார்.  குஃபா என்பதின் பொருள் குகை ஆகும்.   குகை என்பது மலையில் மறைந்துள்ள வழி என்பதைப் போல் இந்த குஃபாவும் ஆன்மிகத்துக்கு வழிகாட்டும் ஒரு குகை என சொல்லிக் கொள்வார்.   ஆனால் இந்தக் குகையினுள் அவர் நீலப்படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது நுழைந்த ஒரு சிஷ்யையை பலாத்காரம் செய்துள்ளார்.  இது பற்றி அவர் அப்போதைய பிரதமர் அடல் பிகார் வாஜ்பாயிக்கு புகார் கடிதம் எழுதி அதில் ஆரம்பித்த விசாரணையில் தான் தற்போது தண்டனை பெற உள்ளார்.

அது மட்டுமின்றி தனது ஆண் சீடர்களுக்கு இவர்களில் சிலரை மனைவியாக்கி உள்ளார்.   அந்த ஆண் சீடர்களின் ஆண்மையை இவர் நீக்கியுள்ளதால்,  அந்தப் பெண்களையும் இவர் தன் வசப்படுத்தியுள்ளார்.  ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட ஒருவர் இது குறித்து தகவல் தெரிவித்த பின் அவர் காணாமல் போய் விட்டார்.   அவர் மனைவி தன் கணவருக்கு பைத்தியம் பிடித்து ஓடி விட்டதாக சொல்லி, இன்னும் இவர் ஆசிரமத்தில் வசித்து வருகிறார்.  சீடரின் இருப்பிடம் இன்று வரை யாருக்கும் தெரியவில்லை.