சென்னை

பிரபல இதழ்களில் கேலிச்சித்திரங்கள் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா இன்று சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன

கார்ட்டூனிஸ்ட் பாலா என்னும் பெயரில் புகழ்பெற்ற கேலிச்சித்திரக்காரர் பாலகிருஷ்ணன்.   இவரது கேலிச்சித்திரங்கள் எளிமையாக இருந்தாலும் அதில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும்.   புகழ் பெற்ற தமிழ்ப் பத்திரிகையில் பணி ஆற்றி உள்ள இவரது கார்ட்டூன்களுக்கு பத்திரிகை உலகில் தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

இவருடைய முகநூல் பக்கங்களில் ஒன்று இவரது எதிர்ப்பாளர்களின் புகாரினால் மூடப்பட்டது.  தற்போது இவரை போலீசார் கைது செய்ததாகவும் இவரது வீட்டில் இருந்து தரதர வென இழுத்துச் சென்றதாகவும் தகவல்கள் வந்துள்ளன.   இது பற்றிய முழு விவரமும்  கைதுக்கான காரணமும் இன்னும் தெரியவில்லை.    அவர் கைது செய்யப்பட்டாரா அல்லது விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டாரா என்பதும் இன்னும் தெரியவில்லை.