மதுரை:

ஒரு மாதத்தில் நேரடி அரசியலுக்கு வந்துவிடுவேன் என்று பிரபல இயக்குநரும் நடிகருமான இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்துளார்.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வர பலரும் முயற்சி செய்து வருகின்றனர். ரஜினி, கமல், விஷால் என்று இந்த பட்டியல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த வகையில் நடிகர் பாக்யராஜ் தீவிர அரசியலில ஈடுபடபோவதாக அறிவித்துள்ளார்.

மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த இயக்குநர் பாக்யராஜ் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ அரசியலுக்கு நேரடியாக வரக்கூடிய வாய்ப்பும் காலமும் நெருங்கிவிட்டது. அந்தச் சூழல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால் இப்போதைக்கு எதுவும் சொல்லமுடியாது. அதற்குக் கொஞ்சம் அவகாசம் தேவை.

நேரடி அரசியல் குறித்து முடிவு எடுக்கும் வாய்ப்பு வந்துவிட்டது. அதற்கான காலம், நீண்டகாலம் என்றெல்லாம் நினைக்கவேண்டாம். ஒரு மாதத்திற்குள் முடிவைச் சொல்லுவேன். யாருக்கு ஆதரவு?, ஏன் ஆதரவு? என்றெல்லாம் அப்போது தெரியும். கொஞ்சம் பொறுத்திருங்கள்’’ என்றார்.