சென்னை:

லங்கை ஈஸ்டர் பயங்கரவாத தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று அதிகாலை முதல் 5 இடங்களில் மீண்டும் திடீர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 21-ந்தேதி ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் ஐ.எஸ். ஆதரவு தற்கொலை பயங்கரவாதிகள் தேவாலயங்கள் உள்பட 9 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பை நடத்தினர். இதில் கோரத்தாக்குதலில்259 பேர் கொல்லப்பட்ட நிலையில்,  ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

இதுதொடர்பான விசாரணையில், இந்த பயங்கரவாதிகளின் குண்டுவெடிப்பை முதலில் தமிழகத்தில் நடத்த திட்டமிட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து தமிழகம் மற்றும் கேரளாவில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வந்தனர். இதில் 14 பேர் வரை  கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், அன்சருல்லா என்ற பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டும் நடவடிக்கையில்சிலர் ஈடுபட்டு வரும் தகவல் கிடைத்த நிலையில்,   கடந்த 14ம் தேதி சென்னை, நாகையில் அதிரடி சோதனை நடத்தி,  ஹசன் அலி, ஆரிஸ் முகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை கைது செய்து டில்லிக்கு அழைத்துச்சென்ற அதிகாரிகள், அங்கு அவர்களிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 16 பேரும் சென்னை அழைத்து வரப்பட்டனர். அவர்களை பூந்தமல்லி  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீஸ் காவலில் எடுத்துள்ள அதிகாரிகள், இன்று அதிகாலை முதல் அவர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.