பெங்களூரு: அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக கர்நாடக மாநிலத்தில்,  நாளை (ஏப்ரல் 22) முதல் மே 4ந்தேதி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப் படுவதாகவும், சனி, ஞாயிறுகளில் வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கர்நாடக மாநலி பாஜக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  இரவு ஊரடங்கான  இரவு 9 மணி முதல் காலை 6 மணி நடைமுறைப்படுத்தாப்படும் என்றும், இது நாளை (22ந்தேதி) இரவு 9 மணி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு ஊரடங்கு உத்தரவின் போது ஜிம்கள், தியேட்டர்கள், பார்கள், விடுதிகள் இரவு 9 மணிக்கு மூடப்பட வேண்டும்,  எனவும் இது ஒருபுறம் இருக்க வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை வார இறுதி ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.