கோவிட்-19 தொற்று குறித்த விழிப்புணர்வு, தகவல்கள் மற்றும் அவசர உதவிக்கு இந்தியாவின் எல்லா மாநிலங்களிலுமே அந்தந்த மாநிலங்களுக்கான தனி தொலைபேசி உதவி மையம் (கால் சென்டர்) அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை நிகிலா விமல், தற்போது கண்ணூர் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் அந்தப் பகுதி மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள கால் சென்டரில் பணியாற்றி வருகிறார்.

அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள் தேவைப்படுகிறது என்று வரும் தொலைபேசி அழைப்புகளை எடுத்துப் பேசி, என்ன வேண்டுமென பட்டியலிட்டு, அதை உரிய அதிகாரிகளுக்கு அனுப்புகிறார்.

தமிழில் ‘வெற்றிவேல்’, ‘கிடாரி’, ‘தம்பி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நிகிலா விமல் என்பது குறிப்பிடத்தக்கது .