சென்னை,

நிலவேம்பு குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு நாடு முழுவதும் இருந்து எதிர்ப்பு குரல்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து கமல்மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் தேவராஜன் என்பவர் புகார் அளித்து உள்ளார்.

தமிழக்ததில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக ஏற்படும் பிளேட்லெஸ்-ஐ தவிர்ப்பதற்காக நிலவேம்பு குடிக்கச்சொல்லி தமிழக அரசும், சித்த மருத்துவர்களும் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் இதற்கு அலோபதி மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் கமல், தனது மன்றத்தினர் நிலவேம்பு கஷாயம் கொடுக்க வேண்டாம் என டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு

இந்நிலையில், கமலின் கருத்து குறித்து,  தமிழக சித்தமருத்துவர்கள் சங்கத்தினரும் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளனர். தமிழக அரசும் நிலவேம்பு குறித்து யாரும் தவறான தகவல்களை பதிவிடக்கூடாது என்று கூறி உள்ளது.

இந்நிலையில், நடிகர் கமல் மீது சென்னையை சேர்ந்த தேவராஜன் என்பவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில்,  தான் 10 ஆண்டுகளாக நிலவேம்பு கஷாயத்தை அருந்தி வருவதாகவும், அதனால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்றும், நிலவேம்பு கஷாயத்தை பற்றி கமல் தவறான தகவல்களை பரப்பி வருகிறார், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்..

இந்த புகார் மனு தொடர்பாக விசாரணை செய்ய சைபர் கிரைம் போலீசுக்கு  மாற்றப்பட்டுள்ளது.