சென்னை:

சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த  9 பேரை, நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டு உள்ளார்.

கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் சென்னை உயர்நீதி மன்றத்துக்கு கூடுதல் நீதிபதிகளாக  பலர் நியமிக்கப்பட்டனர்.  அவர்களில், நீதிபதிகள் பி.டி.ஆஷா, எம்.நிர்மல்குமார், என்.ஆனந்த் வெங்கடேஷ், ஜி.கே.இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சி.சரவணன், பி.புகழேந்தி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்திருந்தது.

இதை ஏற்று அவர்கள்  9 பேரையும் நிரந்தர நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

இவர்களில் ஒருவரான  நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணிமாற்றம் செய்யப்பட்டு, அவர் பதவியேற்றுள்ளார்.

தற்போதைய நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தேவையான 75 நீதிபதிகளில், 21 இடங்கள் காலியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.