இந்தியா முழுக்கவே கொரோனா அச்சுறுத்தல் என்பது இன்னும் குறையவில்லை.இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகிறது.

இதனிடையே, தினமும் பெட்ரோல் – டீசல் விலை உயர்ந்து வருகிறது.

இது தொடர்பாக முன்னணி ஒளிப்பதிவாளரான நீரவ் ஷா தனது ட்விட்டர் பதிவில் “இந்திய அரசாங்கம் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எரிவாயுவின் விலையை அதிகம் ஏற்றிவிடலாம் அப்போதுதான் யாரும் அவர்கள் வீட்டை விட்டு எப்படியும் வெளியே வர முடியாது” என்று நக்கலாக பதிவிட்டுள்ளார்.

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்துக்கு ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .