டில்லி

நிதி அயோக் தலைமை அதிகாரி அமிதாப் கந்த் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1980 ஆம் ஆண்டில் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டவர் அமிதாப் கந்த் ஆவார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிதி அயோக் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

முழு நேரப்பதவியான இவர் பதவிக்காலம் இரு ஆண்டுகள் ஆகும். அதன் பிறகு இவர் பதவிக்காலைம் இந்த வருடம் ஜூன் 30 வரை நீட்டிக்கபட்டது. இன்று மத்திய அரசு இவருடைய பதவிக்காலத்தை மேலும் இரு ஆண்டுகள் நீட்டிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

மத்திய அரசின் அந்த அறிவிப்பில், “முந்தைய ஒப்பந்தத்தின் படி அதே நிபந்தனைகளுடன் நிதி அயோக் தலைமை அதிகாரி அமிதாப் கந்த் பதவிக் காலம் மேலும் இரு ஆண்டுகல் அதாவது 2021 ஆம் வருடம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.