சென்னை:
நிவர் புயல் காரணமாக பெய்யும் கனமழையால் சென்னையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லத்தில் மழைநீர் புகுந்துள்ளது.

நிவர் புயல் நாளை கரையை கடக்கவுள்ள நிலையில் சென்னையில் நேற்றுமுதல் பல்வேறு இடங்களிலும் கனமழை பொழிந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்து நிற்கிறது. இந்த சூழலில் சென்னை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்தில் மழைநீர் புகுந்துள்ளது.

வெள்ளத்தில் மிதக்கிறது அசோக் நகர், கே.கே. நகர்

சென்னையில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அசோக் நகர், கே.கே. நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் தேங்கியுள்ளது.