சென்னை: நிவர் புயல் காரணமாக, சென்னையில் இன்று காலை 10மணி வரை அரக்கோணம் புறநகர் ரயில்சேவை நடைபெறும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

வங்கக்கடலில் உருவான நிவர் புயல்  இன்று மாலை  மாமல்லபுரம்- புதுச்சேரி இடையே கரையை கடக்கும் போது 120 முதல் 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக, பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ள தமிழகஅரசு நாளை, பொதுவிடுமுறையும் விட்டுள்ளது. இந்த நிலையில், பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் புறநகர் ரயில் சேவைகளும் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

அதன்படி, நாளை காலை 10மணி முதல் புறநகர் ரயில்சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவித்து உள்ளது. முன்னதாக சென்னை சென்ட்ரலில் இருந்து காலை, 8.30, 9.00, 9.30, 10.00 மணிக்கு அரக்கோணம் வரை ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவித்து உள்ளது.