நிவர் புயல் காரணமாக, தமிழ்நாடு மாநில பேரிடர் ஆணையம் பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. அதன்படி,  புயல் காலங்களில் போது மக்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்ன என்பது குறித்து விவரித்திருக்கிறது.

‘நிவர்’ புயலால் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளது. இதன்காரணமாக, தமிழ்நாடு மாநில பேரிடர் ஆணையம் பொதுமக்கள்  புயல் மற்றும் கனமழையில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்து உள்ளது.

புயல் காரணமாக, இன்று நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய அதிக கனமழை பெய்யும் என்றும்,  சென்னை, காஞ்சீபுரம், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை முதல் மிக அதிக கன மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், நாளை  (25-ந் தேதி)  நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிக கனமழை பெய்யக்கூடும்.  திருச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை, சென்னை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையை எதிர்பார்க்கலாம். ஏனைய வடமாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு மாநில பேரிடர் ஆணையம் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய  பாதுகாப்பு நடவடிக்கைகளை வருவாய்  நிர்வாகம் மற்றும்  பேரிடயர் மேலாண்மை ஆணையம்  வெளியிட்டு உள்ளது.