கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை பணிகள் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டன.
பல சீரியல்கள் தங்களது ஒளிபரப்பையே ரத்து செய்துள்ளன. குறிப்பாக,சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘அழகு’, ‘கல்யாணப் பரிசு’, ‘தமிழ்ச்செல்வி’, ‘சாக்லேட்’ ஆகிய 4 சீரியல்களையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி இரண்டாம் பாகம் தொடர் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. தற்போது நடிகர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு நடிகர் நடிகைகள் மாற்றப்போவதாக ராதிகா சரத்குமார் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டிருக்கும் சித்தி 2 தொடரின் குழுவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த பொன்வண்ணன் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக நிழல்கள் ரவி இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில் சீரியலில் பொன்வண்ணன் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவி நடிக்கிறார். ஷில்பா நடித்த கதாபாத்திரத்தில் ஜெயலட்சுமி நடிக்கிறார். ராதிகாவின் மருமகளாக நடித்த நிகிலாவுக்குப் பதில் இனி வரும் அத்தியாயங்களில் காயத்ரி நடிக்கிறார். இதுபோக ஸ்ரீஷா உள்ளிட்ட இன்னும் சில கதாபாத்திரங்களிலும் மாற்றம் நிகழ்ந்துள்ளது.