ஜூலை 1-ந்தேதி நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் திடீரென பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இநத கோர விபத்தில், அங்கு பணியாற்றிய 20க்கும் மேற்பட்டோர் சிக்கியதாக கூறப்பட்டது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 தொழிலாளர்கள உயிரிழந்த நிலையில், மேலும் 17 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி ஒவ்வொருவருதாக மேலும் 6 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்த நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு தொழிலாளி இன்று உயிரிழந்தார். இதனால் என்எல்சி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களில் 2 பேர் இளநிலை பொறியாளர்கள், 9 பேர் ஒப்பந்த தொழிலாளர்கள், 2 பேர் நிரந்தர தொழிலாளர்கள். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என்எல்சி நிர்வாகம் 30 லட்ச ரூபாய் பணமும் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலையும் கொடுப்பதாக உறுதி அளித்துள்ளது.