சென்னை:

நொறுக்குத்தீனிகளை பிளாஸ்டிக் பைகளில் அடைக்க தடை கிடையாது என்று தமிழக சட்டமன்றத்தில் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கருப்பணன் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஜனவரி 1ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு வகையான மக்காத ரக பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்  தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று விவாதம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு தூத்துக்குடி தி.மு.க. எம்.எல்.ஏ. கீதா ஜீவன் உணவு பொருட்கள் பேக் செய்யும் பிளாஸ்டிக் பைகள் குறித்து பேசினார்.

அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கருப்பணன்,  மக்கள் மத்தியில் பிளாஸ்டிக் ஒழிப்பு பெரும் நம்பிக்கையை பெற்றுள்ளது. மறுசுழற்சி செய்ய முடியாத, கேடு விளைவிக்கக் கூடிய, மக்காத மற்றும் ஒருமுறை பயன்படுத்தி வீசக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக்குகள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளன. 100 சதவீதம் பிளாஸ்டிக்கை தடை செய்யவில்லை என்றார்.

மேலும், நொறுக்குத் தீனிகளான  மிச்சர், முறுக்கு, கடலை மிட்டாய் போன்ற தின்பண்டங்கள் அடைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக்குகளுக்கு தடையில்லை. பிளாஸ்டிக் ஒழிப்பில் இது ஆரம்ப கட்டம்தான். இன்னும் பல மாற்றங்கள் வரும். அப்போது தெளிவுபடுத்தப்படும். பெரிய நிறுவனங் கள் தயாரிக்கும் தின்பண்டங்களுக்கான பிளாஸ்டிக் பாக் கெட்டுகளை முறைப்படுத்துவதற்கான திட்டமும் அரசிடம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.