தமிழகத்தில் சில சட்டமன்ற உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதால், அவர்களின் தொகுதிகள் காலியாக உள்ளது. அதன்படி, அடுத்த 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
ஆனால், தற்போது தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளதால் மக்கள் நலன் கருதி தற்போது தமிமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த இயலாது என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
தற்போதைய நிலையில், செப்டம்பர் 2-வது வாரம் வரை தேர்தல் நடத்தும் சாத்தியம் இல்லை என்றம், பின்னர் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.