சென்னை:
2 வருடங்களாக தொகுதி பக்கமே போகவில்லை என்பதால் மீண்டும் திருவாடனையில் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இல்லை என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் எந்த கட்சியுடனும் தோழமையாக இருப்போம் என்றும், வரும் சட்டமன்ற தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை அதிமுகவுடன் கூட்டணியா?அமமுகவுடன் கூட்டணியா? என இதுவரை எந்த முடிவும் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

தற்போது வரை நாங்கள் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம் என்று கூறிய அவர், முதல்வர் பழனிச்சாமி தொடர்ந்து பரப்புரையில் உள்ளதால் அவரை சந்திக்க எங்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. அழைப்பு வந்ததும் கூட்டணி குறித்து பேசப்படும் என்றும் தெரிவித்தார்.