கொல்கத்தா: மோடி அரசின் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் போராட்டம் நடைபெற்று வந்தாலும், ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் திட்டமிட்டபடி நடக்கும் என்று தெரிவித்துள்ளது பிசிசிஐ.

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் போராட்டங்கள் வெடித்துள்ளன. குறிப்பாக, மாணாக்கர்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், 2020ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், போராட்டங்கள் காரணமாக இந்த ஏலம் திட்டமிட்டபடி கொல்கத்தாவில் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது. தற்போது பிசிசிஐ தலைவராக இருக்கும் கங்குலியின் சொந்த ஊர் கொல்கத்தா.

ஆனால், ஏல நடவடிக்கைகள் எதுவும் பாதிக்கப்படாது என்றும், திட்டமிட்டபடி ஐபிஎல் வீரர்கள் ஏலம் நடைபெறும் என்றும் பிசிசிஐ தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.