எந்த வடிவில் இந்தி வந்தாலும் அவற்றை தமிழகம் ஏற்காது என்றும், அதுவே அரசின் கொள்கை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “மொழி விஷயத்தில் ஒருமித்த கருத்து இருக்க வேண்டும். நீட் தேர்வு தோல்வியால் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது. தற்கொலை என்பது தீர்வல்ல. முதலமைச்சரின் சமூக வலைதள பதிவு அரசியல் ஆக்கப்பட்டுள்ளது. தமிழ் பிற மாநிலங்களிலும் ஒலிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் போடப்பட்ட பதிவு அது. தமிழை மற்ற மாநிலங்களில் படிக்கக்கூடாதா ? இந்தி தொடர்பான சர்ச்சையை தவிர்ப்பதற்காகவே ட்விட்டரில் பதிவிட்ட கருத்தை முதல்வர் நீக்கினார்

எந்த வடிவத்திலும் இந்தியை தமிழகம் ஏற்காது. இதுதான் அரசின் கொள்கை. இருமொழிக் கொள்கையில் இருந்து பின்வாங்க மாட்டோம். மொழிக் கொள்கையில் எவ்வித மாறுபாடும் இல்லை” என்று தெரிவித்தார்.