இடாநகர்: அருணாச்சல பிரதேச மாநிலத்தில் 4 நாட்களாக எவ்வித கொரோனா தொற்றுகளும் பதிவாகவில்லை.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தியதில் இன்று 335வது நாளாகும். நாடு முழுவதும் 1,55,483 இறப்புகள் உள்பட 1,10,16, 434  கொரோனா தொற்றுகள் பதிவாகி உள்ளன.

இந்த தொற்றில் இருந்து இதுவரை 1,07,12,665 பேர் மீண்டுள்ளனர். இந்தியாவில் உயர்ந்து வரும் மீட்பு விகிதம் இப்போது 97.24 சதவீதமாக உள்ளது. உலகளவில் கிட்டத்தட்ட 11.16 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந் நிலையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக ஒரு கொரோனா தொற்று கூட பதிவாகவில்லை. வடகிழக்கு மாநிலங்களில் தற்போது 16,836 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அருணாச்சல பிரதேசத்தில் மட்டும் 5 தொற்றுகள் இப்போது உள்ளன. ஒட்டு மொத்தமாக 16,775 பேர் இந்நோயில் இருந்து மீண்டுள்ளனர். இம்மாநிலத்தில் கொரோனா நோயாளிகள் மீட்பு விகிதம் 99.63 சதவீதமாக உள்ளது.