அபுதாபி: ஐபிஎல் 2020 முதல் பிளே-ஆஃப் போட்டியில், அனுபவமும் வலிமையும் வாய்ந்த மும்பை அணியை எதிர்கொள்வதில் எந்த அச்சமுமில்லை என்றுள்ளார் டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ்.

அவர் கூறியுள்ளதாவது, “பெங்களூருவுக்கு எதிராக நாங்கள் பெற்ற வெற்றி மிக முக்கியமானது. ஏனெனில், தொடர்ச்சியாக 4 தோல்விகளால் துவண்டிருந்த எங்களுக்கு, அந்த வெற்றி அவசியம் தேவைப்பட்டது.

புள்ளிப் பட்டியலில் இரண்டாமிடம் பெற்றதில் மகிழ்ச்சி. முதல் பிளே-ஆஃப் போட்டியில் மும்பை சந்திப்பது சவாலானதுதான். அதேசமயம், அதுகுறித்து நாங்கள் பயப்படவில்லை.

போட்டி நாளன்று சிறப்பாக செயல்படுவதுதான் முக்கியமானது. போட்டியின்போதான நெருக்கடிகளிலிருந்து எளிதாக மீண்டு வருவது முக்கியம்” என்றுள்ளார் ஷ்ரேயாஸ்.