சென்னை:

ஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக ரமலான் நோன்பு இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ள நிலையில், முஸ்லிம்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள் என்றும், இப்தார் நிகழ்ச்சிகள் வேண்டாம் என்றும்  உலமாக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாகி உள்ளது. இதனால் ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில், ரமலான் மாதம் அடுத்த வாரம் பிறக்க உள்ளது. இந்த மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு இருந்து இளைவனை தொழுவது வழக்கம்.

இந்த நிலையில்,  தராவீஹ் எனப்படும் இரவு நேர சிறப்புத் தொழுகையை, பள்ளிகளுக்கு வராமல் வீடுகளிலேயே தொழுது கொள்ளுமாறு மசூதிகளில் தொழுகைகளை நடத்தி வரும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களான உலமாக்கள்  கேட்டுக் கொண்டுள்ளனர்

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், சமூக  இடைவெளியை உறுதிப்படுத்தும் வகையில் ரமலான் தொடர்பான அனைத்து வணக்க வழிபாடுகளையும் வீடுகளிலேயே நடத்திக்கொள்ளுங் கள், மசூதிக்கு வர வேண்டும் என்றும்,   வழக்கமாக நடக்கும் இஃப்தார் எனப்படும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்றும் அதற்கு செலவழிக்கும் பணத்தை வருமானமின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு வழங்குமாறும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனாவின் பிடியில் இருந்து உலகமக்களை காக்குமாறு ரமலான் மாதத்தில், எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சுமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.