சென்னை,

ரும்  17ஆம் தேதி மருத்துவக் கலந்தாய்வு நடத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புகளில், மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு, 85 சதவீதம்; சி.பி.எஸ்.இ.  எனப்படும், மத்திய  கல்வி வாரியத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு, 15 சதவீதம் ஒதுக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் சிபிஎஸ்இ-ல் படித்த மாணவர்கள் சார்பாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு குறித்த நேற்றைய விசாரணையின்போது தமிழக அரசு சார்பில்,  ‘மருத்துவப் படிப்பில், மாநில பாடத் திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கு, தனி ஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளது’ என, பதில் மனு தாக்கல் செய்தது.

இந்நிலையில் இன்றைய விசாரணையின்போது சென்னை ஐகோர்ட்டு, ஜூலை 17ந்தேதி மருத்துவ கலந்தாய்வு நடத்த கூடாது என்றும், தர வரிசை பட்டியல் வெளியிடுவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், மாணவர் சேர்க்கையில் தற்போதையே  நிலையே தொடர வேண்டும் எனக்கூறி, வழக்கின் தீர்ப்பை ஐகோர்ட் ஒத்திவைத்தது.

இதன் காரணமாக கவுன்சிலிங் தேதி மீண்டும் தள்ளிப்போகும் என தெரிகிறது.