சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் தமிழகக் காவல்துறை இயக்குநருக்கு சமூக வலை தளப் பதிவுகள் குறித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் சமூக வ்லை தளங்களில் ஆபாசப் பதிவு மற்றும் அவதூறு  பரப்புதல் குறித்து தமிழக காவல்துறை இயக்குநருக்கு சில ஆணைகள் பிறப்பித்துள்ளது.

அவை பின் வருமாறு :

ஆபாசப் பதிவுகள் மற்றும் அவதூறு பரப்பும் செய்திகளை சமூக வலை தளங்களில் பதிவோர் மீது கருணை காட்ட முடியாது.

தமிழக காவல்துறை சமூக வலைத்தளங்களில் ஆபாசமாகவும் மற்றும் அவதூறு பரப்பும் வகையிலும் கருத்து பதிவோர்களைக் கண்டறிய வேண்டும்.

 இதற்கு ஒரு சிறப்புப் பிறிவை இன்னும் இரு மாதங்களுக்குள் அமைக்க வேண்டும்.

அத்துடன் ஆதாரமற்ற பதிவுகளை பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்காகத் தனிப்பிரிவு ஒன்றை காவல்துறை அமைக்க வேண்டும்.

ஆதாரமில்லாமல் உயர் பதவிகள் இருப்போர் மீது அவதூறு பரப்புபவர்களைக் கண்காணிக்க வேண்டும்.

என தெரிவிக்கப்பட்டுள்ளது.