இந்திய ரூபாய் மதிப்பு சரிவு குறித்து அச்சப்பட வேண்டாம்: அருண்ஜேட்லி
டில்லி:
நமது நாட்டின் ஜிடிபி (மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி) நல்ல நிலையில் இருப்பதால், டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு சரிவது குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி கூறியுள்ளார்.
இந்திய நாட்டின் ரூபாய் மதிப்பு கடந்த சில நாட்களாக வரலாறு காணாத சரிவை கண்டு வருகிறது. நாளுக்கு நாள் ரூபாயின் மதிப்பு சரிவடைந்து வருவது தொழில் நிறுவனங்களிடையே பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி வருகிறது.
நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தக பிரச்சினை, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்வு, நாட்டின் பொருளாதார பாதிப்பு போன்ற பிரச்சனைகளால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, சர்வதேச அளவில் ஏற்ப்பட்டுள்ள சில காரணிகளால் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பை காட்டிலும், மற்ற நாடுகளின் கரன்சி மதிப்பு அதிக அளவில் சரிவடைந்துள்ளது.
எனவே இந்திய ரூபாயின் மதிப்பு குறித்து யாரும் அச்சம் அடைய வேண்டாம். இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது, எனவே ரூபாயின் மதிப்பு சரிவுக்கு உள்நாட்டுப் பொருளாதாரம் காரணம் அல்ல .
இவ்வாறு அவர் கூறினார்.