புதுடெல்லி:

சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு சம்பத்தில், 68 பேரை யார் கொன்றார்கள் என்பது யாருக்குமே தெரியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.


காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தமது ட்விட்டர் பதிவில் , ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கொல்லப்பட்ட 68 பேரில் பெரும்பாலோர் பாகிஸ்தானியர்கள்.
இந்த வழக்கில் சுவாமி அசிமானந்த் மற்றும் 3 பேர் பஞ்சகுலா சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது.

இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 68 பேர் கொல்லப்பட்டனர்.

அனைவரையும் விடுவித்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பை பார்க்கும்போது,68 பேரை கொன்றது யார் என யாருக்கும் தெரியாது. நமது கிரிமினல் நீதித்துறை முறையை நினைத்து பெருமைப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்,