சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அமைத்த கூட்டணி தற்போதும் தொடர்கிறது, எங்கள் கூட்டணியில் இருந்து யாரும் போக மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என  அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாள் இன்று அவரது கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி செய்தியாளர்களை  சந்தித்த பிரேமலதா, சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தொண்டர்கள் விரும்புவதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியளர்கள் தேமுதிகவின் முடிவு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது,

கூட்டணியில் சின்ன சின்னப்பிரச்சினைகள் இருந்தாலும், அது தேர்தல் நேரத்தில் சரியாகிவிடும் என்று கூறியவர், தனித்து போட்டியிடுவதாக பிரேமலதா கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்றார். மேலும், நாடாளுமன்ற தேர்தலின்போது அதிமுகவுடன் ஏற்பட்ட கூட்டணி தொடர்ந்து வருவதாக கூறியவர்,  அதிமுக கூட்டணியை  விட்டு யாரும் போக மாட்டார்கள் என நம்புவதாகவும்  தெரிவித்தார்.