சென்னை: தியேட்டர்களில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு செய்ய அனுமதி அளிக்க வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தியேட்டர்களில்  ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தற்போதைய சூழலில் அனுமதி அளிக்க வாய்ப்பு இல்லை.

தியேட்டர்களில் மக்கள் 3 மணி நேரம் இருக்க வேண்டிய சூழல் உள்ளது. கொரோனா தொற்றின் சூழலை ஆராய்ந்து, கண்காணித்து தியேட்டர்களை திறப்பது பற்றி முடிவு எடுக்கப்படும்.

தியேட்டர்கள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படாத நிலையில் மற்ற நடவடிக்கைகள் பற்றி பேசுவது சரியாக இருக்காது. கன்னியாகுமரியில் அதிமுக போட்டியிடுமா என்பது பற்றி கட்சியின் தலைமைதான் முடிவு எடுக்க வேண்டும் என்றார்.