சென்னை:

ரும்புத்திரை படத்துக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நடிகர் விஷால் நடித்துள்ள படம் இரும்புத்திரை. இப்படத்தில் ஆதார் குறித்து தவறான தகவல் இடம்பெற்றுள்ளதாக கூறி   படத்துக்கு தடை விதிக்க கோரி நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

அவர்  தாக்கல் செய்துள்ள  மனுவில், நடிகர் விஷால் நடித்துள்ள இரும்புத்திரை திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட ஆதார் அடையாள அட்டை குறித்து தவறாகச் சித்திரித்து காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

ஆதார் அடையாள அட்டைக்காக  பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் தகவல்களைத் தவறாக பயன்படுத்துவது போல காட்சிள் இடம் பெற்றுள்ளன.

இந்த காட்சிகளுடன் திரைப்படம் வெளியானால், டிஜிட்டல் இந்தியா மற்றும் ஆதார் திட்டங்கள் குறித்து மக்களிடம் தேவையற்ற குழப்பம் ஏற்படுவதுடன் அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விடுவார்கள். எனவே, சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்படும் வரை இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், படத்துக்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டது.

ஆகவே படம் வெளியாவதில் ஏதும் பிரச்சினை இருக்காது என்று படத்தயாரிப்பு வட்டாரம் தெரிவிக்கறது.